பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சர்கார்பதி வனப்பகுதியில் வெட்டி கொண்டு வரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் மரத்தை பாலாற்றில் வைத்து பூஜை செய்து பக்தர்கள் படை சூட ஊர்வலாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலின் ராஜ கோபுரம் முன்பு மேலதாளங்கள் முழங்க, பக்தர்களின் பரவச கோஷத்துடன் மூங்கில் மரம் கொடி ஏற்றி வைத்து குண்டம் திருவிழா தொடங்கியது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.



இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா வருகிற 25ம்தேதி நடைபெற இருகிறது. குண்டம் திருவிழாக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. சர்கார்பதி வனப்பகுதியில் வெட்டி கொண்டு வரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் மரத்தை பாலாற்றில் வைத்து பூஜை செய்து பக்தர் படை சூட ஊர்வலாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலின் ராஜ கோபுரம் முன்பு மேலதாளங்கள் முழங்க, பக்தர்களின் பரவச கோஷத்துடன் மூங்கில் மரம் கொடி ஏற்றி வைத்து குண்டம் திருவிழா தொடங்கியது.

இந்த நிகழ்வில் கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானபூஜை 23ம் தேதி நள்ளிரவிலும், 25ம் தேதி காலை குண்டம் இறக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

Newsletter

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...