கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.43 கோடி கடன் உதவி

ஊரகப்பகுதியைச் சார்ந்த 154 மகளிர் சுய உதவிக்களுக்கு ரூ.13.45 கோடி, நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 445 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.33.78 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை, மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் வழங்கினர்.


கோவை: தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 2023 - 24 ஆம் ஆண்டில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு 924 கோடி இலக்கு நிர்ணயித்திருக்கின்றனர். இந்த நிலையிலே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, கோயம்புத்தூரில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கடன் உதவி தரப்பட்டன.



கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கிலே, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, கலெக்டர் கிராந்தி குமார் பாடி மற்றும் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடனுதவி காசோலைகளை வழங்கினர்.



ஊரகப்பகுதியைச் சார்ந்த 154 மகளிர் சுய உதவிக்களுக்கு 13.45 கோடி, நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 445 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 33.78 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை, மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் வழங்கினர்.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில், 6835 மகளிர்கள் இதன் வாயிலாக சுயதொழில் செய்யவும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த கடன் உதவி வழங்கினர். இது குறித்து பேசிய கடன் உதவி பெற்ற மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகள், இந்தக் கடனுதவி தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெருமளவில் உதவும் என தெரிவித்தனர்.

குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்களின் வாயிலாக கடன் உதவி பெற்றவர்கள், அதனை வைத்து தையலகம், உணவகம், பூக்கடை, ஆடு மேய்த்தல், மாடு மேய்த்தல், கோழி வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சுயதொழில் மேம்படுத்த உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தனர். பெண்கள் எதிர்பார்த்த தொகையை விட கூடுதலாக கடன் உதவி கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சி என்றும், இதனை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...