கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.43 கோடி கடன் உதவி

ஊரகப்பகுதியைச் சார்ந்த 154 மகளிர் சுய உதவிக்களுக்கு ரூ.13.45 கோடி, நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 445 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.33.78 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை, மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் வழங்கினர்.


கோவை: தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 2023 - 24 ஆம் ஆண்டில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு 924 கோடி இலக்கு நிர்ணயித்திருக்கின்றனர். இந்த நிலையிலே, கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, கோயம்புத்தூரில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கடன் உதவி தரப்பட்டன.



கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கிலே, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, கலெக்டர் கிராந்தி குமார் பாடி மற்றும் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடனுதவி காசோலைகளை வழங்கினர்.



ஊரகப்பகுதியைச் சார்ந்த 154 மகளிர் சுய உதவிக்களுக்கு 13.45 கோடி, நகர்ப்புற பகுதியைச் சேர்ந்த 445 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 33.78 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை, மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் வழங்கினர்.



கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில், 6835 மகளிர்கள் இதன் வாயிலாக சுயதொழில் செய்யவும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த கடன் உதவி வழங்கினர். இது குறித்து பேசிய கடன் உதவி பெற்ற மகளிர் சுய உதவி குழு பிரதிநிதிகள், இந்தக் கடனுதவி தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெருமளவில் உதவும் என தெரிவித்தனர்.

குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்களின் வாயிலாக கடன் உதவி பெற்றவர்கள், அதனை வைத்து தையலகம், உணவகம், பூக்கடை, ஆடு மேய்த்தல், மாடு மேய்த்தல், கோழி வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு சுயதொழில் மேம்படுத்த உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தனர். பெண்கள் எதிர்பார்த்த தொகையை விட கூடுதலாக கடன் உதவி கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சி என்றும், இதனை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...