கோவை வடவள்ளி இளைஞர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவு

ஆபாசம் படம் பார்ப்பதாகக் கூறி பலரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்த புகாரில், சபரி என்பவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அதன் நகல் சிறையில் உள்ள சபரியிடம் நேற்று (பிப்.7) புதன்கிழமை வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் ஆபாசம் படம் பார்ப்பதாகக் கூறி பலரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக மாநகர சைபா் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சைபா் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், கோவை வடவள்ளியைச் சோ்ந்த சபரி (23) உள்ளிட்ட 10 போ், சைபா் குற்றப் பிரிவு போலீஸார் என்றும், ஆபாச படம் பார்த்ததுக்கு வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும் என்றுகூறி பலரையும் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து சபரி உள்ளிட்ட 10 பேரையும் போலீஸார் அண்மையில் கைது செய்தனா். இந்தக் கும்பலுக்கு தலைமையாக சபரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில், சபரி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையருக்கு சைபா் குற்றப் பிரிவு போலீஸார் பரிந்துரை செய்தனா்.

இதைத் தொடா்ந்து சபரி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அதன் நகல் சிறையில் உள்ள சபரியிடம் நேற்று (பிப்.7) புதன்கிழமை வழங்கப்பட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...