தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று பொள்ளாச்சி திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தனித்திறமை, சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பொள்ளாச்சியில் இருந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி மேதினி, மூன்றாம் வகுப்பு மாணவன் ஆதோவ் ஆகிய இருவர் தங்கப் பதக்கமும், மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தின் வெள்ளி பதக்கமும் வென்றனர்.


கோவை: ஹரியானா மாநிலத்தில் கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் 300 பேர் பங்கேற்றனர். இதில் தனித்திறமை, சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பொள்ளாச்சியில் இருந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி மேதினி, மூன்றாம் வகுப்பு மாணவன் ஆதோவ் ஆகிய இருவர் தங்கப் பதக்கமும், மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தின் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

பதக்கம் பெற்று இன்று பொள்ளாச்சி வந்த மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்களும், உறவினர்களும் மாலை மற்றும் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்காப்பு கலையான சிலம்பத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுனர் என்றும், கேலோ விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பதால் அதிலும் பங்கேற்று, மாணவர்கள் பதக்கங்கள் வெல்வதற்கு லட்சியத்தோடு இருப்பதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...