சரவணம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ள விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ரூ.780 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை (பில்லூர் - III) துவக்கி வைக்க, வரும் 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.


கோவை: கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், பவானி ஆற்றினை நீராதாரமாக கொண்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.780 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை (பில்லூர் - III) துவக்கி வைக்க, வரும் 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.



இந்த நிலையில் இத்திட்டத் துவக்க விழா நடைபெறும் கோவை, சரவணம்பட்டி, குமரகுரு பொறியியல் கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் விழா பந்தல் அமைக்கும் பணிகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர், சு.முத்துசாமி தலைமையில் இன்று (பிப்.7) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழகச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், வடக்கு மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...