சரவணம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ள விழா நடைபெறும் இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ரூ.780 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை (பில்லூர் - III) துவக்கி வைக்க, வரும் 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.


கோவை: கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில், பவானி ஆற்றினை நீராதாரமாக கொண்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் புதியதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ரூ.780 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளை (பில்லூர் - III) துவக்கி வைக்க, வரும் 11.02.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின் கோவை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.



இந்த நிலையில் இத்திட்டத் துவக்க விழா நடைபெறும் கோவை, சரவணம்பட்டி, குமரகுரு பொறியியல் கல்லூரி அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் விழா பந்தல் அமைக்கும் பணிகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர், சு.முத்துசாமி தலைமையில் இன்று (பிப்.7) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கழகச் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்கள், வடக்கு மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...