கோவை சுங்கம் பகுதியில் அதிநவீன சிசிடிவி கேமரா காவல் அறை திறப்பு

அதிநவீன சிசிடிவி கேமரா காவல் அறையில், குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி மற்றும் மைக், நான்கு அதிநவீன சிசிடிவி கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளது.


கோவை: கோவை சுங்கம் பகுதியில் புதிய காவல் அறை ஒன்றை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (பிப்.6) திறந்து வைத்தார். அதில் குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி மற்றும் மைக், நான்கு அதிநவீன சிசிடிவி கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த காவல் அறையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்களில், அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தானியங்கி செயல்பாட்டின் மூலம் ஒவ்வொரு வாகன எண்ணும் பதிவேற்றம் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.



அதேபோன்று சாலையைக் கடப்பவர்கள் எளிதாக கடந்து செல்வதற்கான சிறப்பு சிக்னலையும் கோவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

இந்த சிக்னலை பொதுமக்களை உபயோகப்படுத்தி சாலையை எளிதாக கடக்கலாம் எனவும் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. கோவை மாநகர காவல் துறையின் இந்த நடவடிக்கை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...