கோவை சுங்கம் பகுதியில் அதிநவீன சிசிடிவி கேமரா காவல் அறை திறப்பு

அதிநவீன சிசிடிவி கேமரா காவல் அறையில், குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி மற்றும் மைக், நான்கு அதிநவீன சிசிடிவி கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளது.


கோவை: கோவை சுங்கம் பகுதியில் புதிய காவல் அறை ஒன்றை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (பிப்.6) திறந்து வைத்தார். அதில் குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி மற்றும் மைக், நான்கு அதிநவீன சிசிடிவி கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த காவல் அறையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்களில், அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தானியங்கி செயல்பாட்டின் மூலம் ஒவ்வொரு வாகன எண்ணும் பதிவேற்றம் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.



அதேபோன்று சாலையைக் கடப்பவர்கள் எளிதாக கடந்து செல்வதற்கான சிறப்பு சிக்னலையும் கோவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

இந்த சிக்னலை பொதுமக்களை உபயோகப்படுத்தி சாலையை எளிதாக கடக்கலாம் எனவும் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. கோவை மாநகர காவல் துறையின் இந்த நடவடிக்கை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...