கோவை சுங்கம் பகுதியில் அதிநவீன சிசிடிவி கேமரா காவல் அறை திறப்பு

அதிநவீன சிசிடிவி கேமரா காவல் அறையில், குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி மற்றும் மைக், நான்கு அதிநவீன சிசிடிவி கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளது.


கோவை: கோவை சுங்கம் பகுதியில் புதிய காவல் அறை ஒன்றை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (பிப்.6) திறந்து வைத்தார். அதில் குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, விளக்குகள், ஒலிபெருக்கி மற்றும் மைக், நான்கு அதிநவீன சிசிடிவி கேமராக்கள், கண்காணிக்கும் திரை உள்ளிட்டவை பொருத்தப்பட்டு உள்ளது.

மேலும் இந்த காவல் அறையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்களில், அந்த வழியாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தானியங்கி செயல்பாட்டின் மூலம் ஒவ்வொரு வாகன எண்ணும் பதிவேற்றம் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.



அதேபோன்று சாலையைக் கடப்பவர்கள் எளிதாக கடந்து செல்வதற்கான சிறப்பு சிக்னலையும் கோவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்.

இந்த சிக்னலை பொதுமக்களை உபயோகப்படுத்தி சாலையை எளிதாக கடக்கலாம் எனவும் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. கோவை மாநகர காவல் துறையின் இந்த நடவடிக்கை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்கள் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...