குடியரசுத் தலைவர் உரைக்கு திருத்தங்கள் கோரி பி.ஆர். நடராஜன் எம்பி நோட்டீஸ் தாக்கல்

குடியரசுத் தலைவர் உரையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன் என்று பி.ஆர். நடராஜன் எம்பி தெரிவித்துள்ளார்.


கோவை: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சில திருத்தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதன்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர், பி.ஆர். நடராஜன், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சில திருத்தங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதன் விவரங்கள் வருமாறு: குடியரசுத் தலைவர் உரையின் இறுதியில் கீழ்க்கண்டதைச் சேர்த்திட வேண்டும். இந்த உரையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன்.

“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அதிலும் குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது என்பதைக் குறிப்பிடவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.”

“இந்தியப் பொருளாதாரம் ஆழமான மந்தநிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பது பற்றி ஒன்றும் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.” “மணிப்பூர் பிரச்சனையைக் கட்டுப்படுத்திட டபுள் என்ஜின் அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது என்பது குறிப்பிடப்படாததற்காக வருந்துகிறேன்.”

“கூட்டாட்சித் தத்துவம் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்தும், மாநில அரசாங்கங்கள் மீது அரசமைப்புச்சட்டப் பங்கினை அரித்துவீழ்த்தும் விதத்தில் ஆளுநர்களின் மாளிகைகள் பயன்படுத்துவது அதிகரித்து இருப்பது குறித்தும், அதிகாரங்களை மையத்தில் குவிப்பதற்கான விருப்பம் அதிகரித்து வருவது குறித்தும் எதுவும் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.” இவ்வாறு பி.ஆர். நடராஜன் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...