குடியரசுத் தலைவர் உரைக்கு திருத்தங்கள் கோரி பி.ஆர். நடராஜன் எம்பி நோட்டீஸ் தாக்கல்

குடியரசுத் தலைவர் உரையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன் என்று பி.ஆர். நடராஜன் எம்பி தெரிவித்துள்ளார்.


கோவை: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சில திருத்தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதன்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர், பி.ஆர். நடராஜன், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சில திருத்தங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதன் விவரங்கள் வருமாறு: குடியரசுத் தலைவர் உரையின் இறுதியில் கீழ்க்கண்டதைச் சேர்த்திட வேண்டும். இந்த உரையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன்.

“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அதிலும் குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது என்பதைக் குறிப்பிடவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.”

“இந்தியப் பொருளாதாரம் ஆழமான மந்தநிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பது பற்றி ஒன்றும் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.” “மணிப்பூர் பிரச்சனையைக் கட்டுப்படுத்திட டபுள் என்ஜின் அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது என்பது குறிப்பிடப்படாததற்காக வருந்துகிறேன்.”

“கூட்டாட்சித் தத்துவம் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்தும், மாநில அரசாங்கங்கள் மீது அரசமைப்புச்சட்டப் பங்கினை அரித்துவீழ்த்தும் விதத்தில் ஆளுநர்களின் மாளிகைகள் பயன்படுத்துவது அதிகரித்து இருப்பது குறித்தும், அதிகாரங்களை மையத்தில் குவிப்பதற்கான விருப்பம் அதிகரித்து வருவது குறித்தும் எதுவும் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.” இவ்வாறு பி.ஆர். நடராஜன் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...