உடுலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு- மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பதாகைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தி மாணவிகள் ஊர்வலமாகச் சென்றனர். உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் சிலை வழியாக ஊர்வலமாக சென்ற பேரணி மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.


திருப்பூர்: உடுமலை உட்கோட்ட காவல்துறை உடுமலை போக்குவரத்து காவல்துறை, எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை ஸ்ரீ‌ ஜிவிஜி மகளிர் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை பஸ் நிலையத்தில் துவங்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணிக்கு உடுமலை டிஎஸ்பி சுகுமார் தலைமை வகித்தார். எண்ணம் போல் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் வரவேற்றார். இதில் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.



இதில் அவர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த பதாகைகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தி ஊர்வலமாகச் சென்றனர். உடுமலை பஸ் நிலையத்தில் இருந்து காமராஜர் சிலை வழியாக ஊர்வலமாக சென்ற பேரணி மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாதுகாப்பு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாணவிகள் இடையே பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி போக்குவரத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக உடுமலை இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், போக்குவரத்து உதவி ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் சரவணகுமார், நூலகர் கணேசன்(ப.நி) ஆகியோர் கலந்து கொண்டனர். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் , உறுப்பினர்கள் சிவலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...