பூமி தாயை பாதுகாப்பது ரொம்ப ரொம்ப முக்கியம் - கோவையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சிவ சூரியன் வலியுறுத்தல்

கடவுள் நம்பிக்கை உள்ளவரான தொண்டாமுத்தூரை சேர்ந்த சிவ சூரியன் என்பவர் அயோத்தி கோயில் முன் நின்று கடவுள்களுக்கும் தாய் நம்ம பூமி தாய் என்றும், பூமியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீடியோ பதிவிட்டு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலரான சைக்கிள்ஸ்டூ சிவ சூரியன். இவர் பூமியில் நிலவும் கால நிலைகளை பொதுமக்கள், பள்ளி கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.

இவர் பெரும்பாலும் அனைத்து இடங்களுக்கும், அனைத்து பகுதிகளுக்கும் சைக்கிளிலேயே பயணம் செய்பவர். இந்த நிலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக 10 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிலில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றார். இவர் தற்போது அயோத்தி ராமர் கோயில் சென்றிருக்கின்றார்.

அடிப்படையில் கடவுள் நம்பிக்கை உள்ளவரான சிவ சூரியன், கோயில் முன் நின்று கடவுள்களுக்கும் தாய் நம்ம பூமி தாய் என்றும், பூமியை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

அவர் ராமர் கோயில் முன் பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோவில், நானும் என் குடும்பத்தாரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். எல்லா கடவுள்களுக்கு தாய் கடவுள் இருக்கின்றன. ராமர், கிருஷ்ணர், ஜீசஸ், அல்லா என எல்லா கடவுள்களுக்கும் தாய், இந்த பூமி தாய். அதனை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கோரிக்கை வைக்கின்றேன். கால நிலை மாற்றத்தை ஒவ்வொரு மீட்டிங் டேபிள் மட்டுமன்றி டைனிங் டேபிளிலும் விவாதிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார். அதன் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் விழிப்புணர்வில் ஈடுபட்டுகின்றேன்.

இந்த நிலையில் எனக்குள் ஒன்று தொன்றியது. இங்கு கஷ்டப்பட்டு நாம் கோயில் கட்டியிருக்கின்றோம். அவ்வொரு மதத்தினரும் மஸ்ஜித், தேவாலயம் கோயில் கட்டலாம். அடிப்படையில் நம் அடுத்த தலைமுறையும் கோயிலில் தரிசிக்க வேண்டும். அதற்கு இந்த உலகை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அதற்கு நாம் என்ன பங்களிப்பை தருகிறோம் என்பது முக்கியம்.

அதே சமயம் அரசாங்கம் நினைத்தால், கால நிலை மற்றும் சுற்றுச்சூழல் குறித்து அனைவருக்கும் கொண்டுசெல்ல முடியும். இதனை செய்ய வேண்டும். மரம் வளர்ப்பதனால் என்ன பயன் என்று கேட்கின்றனர். மரம் வளர்ப்பதன் பயனை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.

இந்த நிலையில் மரம் வளர்க்கின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குதல், சிறந்த மாணவராக அங்கிகரித்து விருது தர வேண்டும். இதனை மக்கள் இயக்கமாக மாற்றினால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும். நாம் வணக்குவதற்கு ஆயிரம் கடவுள்கள் இருக்கின்றன. ஆனால் வாழ ஒரு பூமி மட்டுமே இருப்பதனால், வாழும் பூமியை நாம் பாதுகாக்க வேண்டும் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...