பொள்ளாச்சி பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி-பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அருகே சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டி வைத்துள்ள ஜல்லி கற்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் மணிகண்டன் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சடையக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டபூபதி. ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று அதிகாலை பயணிகளை ஏற்றுக் கொண்டு பொள்ளாச்சி பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு மீண்டும் சடையக்கவுண்டனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பொள்ளாச்சி-பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் அருகே சாலையில் நெடுஞ்சாலைத் துறையினர் கொட்டி வைத்துள்ள ஜல்லி கற்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் மணிகண்டன் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ஆட்டோ ஓட்டுனரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே நெடுஞ்சாலை துறையினர் அலட்சியத்தால் சாலையில் கொட்டி வைத்த ஜல்லிகற்கள் மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகி ஓட்டுனர் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதால், நெடுஞ்சாலைத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் சாலை கரப்பாடி பிரிவில் ஆட்டோ ஓட்டுனர்களும், பொதுமக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்றப்பட்டு இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...