குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்கு சேகரிப்பின்போது குழந்தைகளுடன் இணைந்து சிலம்பம் சுழற்றி வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினார். அவருக்கு AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளரும் முன்னாள் அமைச்சர்ருமான எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவரது தேர்தல் பிரசார பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.





அதன் தொடர்ச்சியாக இன்று குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவர், அந்த பகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு சிலம்பம் சுழற்றி AIADMK சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.





வரவேற்பின்போது குழந்தைகளுடன் இணைந்து அவரும் சிலம்பம் சுழற்றி வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். தமிழ் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்வு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொண்டாமுத்தூர் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எஸ்.பி.வேலுமணி, வாக்காளர்களின் ஆதரவை திரட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...