தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி தீவிர எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாளை (April 16) தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.


Chennai: தொகுதி மறுவரையறையைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகள், கடைகள் அனைத்திலும் கருப்புக் கொடி பறக்கட்டும். வாசல்களில் எதிர்ப்புணர்வு கோலங்களாக பதியட்டும். இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம், தமிழர் உரிமைக்கான போராட்டம்.

எனவே, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். இன்று நாம் குரல் எழுப்பவில்லை என்றால், நாளை நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பிழக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் போராட்டத்திற்குத் தேவையான கருப்புக் கொடிகள் வீடு தோறும் வழங்க மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்”, குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...