பெரியகவுண்டனூரில் பிளாஸ்டிக், டயர் கழிவுகளை எரிப்பதால் நிலத்தடி தண்ணீர் மாசடைவதாக விவசாயிகள் புகார்

விளை நிலங்களுக்கு நடுவில் கழிவுகளை கொட்டி எரித்து வரும் தனியார் நிறுவனத்தின் மீது ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள பெரியகவுண்டனூர் பகுதியில் விளை நிலங்களுக்கு நடுவில் தனியார் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் மற்றும் டயர் கழிவுகளை குவியலாக கொட்டி வைத்து ஒரு வகையான அமிலத்தை கொண்டு எரித்து சாம்பலாக்கி அதை விற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த கழிவுகள் எரிக்கப்படும் போது ஏற்படும் புகையால் அதைச் சுற்றியுள்ள தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதோடும், அமிலங்களை ஊற்றி கழிவுகளை எரித்து வருவதால் மண்ணின் சத்துத்தன்மை குறைந்து வருவதோடு நிலத்தடி நீரும் மாசடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.



மேலும் அங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம் வரும் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றத்துடன் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடியாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கழிவுகளைக் கொட்டி எரித்து வருவதற்கு மாசுக்கட்டுபாடு வாரியத்தில் அனுமதி வாங்கப்பட்டதா என்று அந்நிறுவன ஊழியரிடம் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த நிறுவனத்தைச் சுற்றியுள்ள ஆழ்துளை கிணறில் இருந்து மாசடைந்து வரும் தண்ணீரையும் சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து வந்ததாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விலை நிலங்களை காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...