கோவை மாநகராட்சி ஊழியர்கள் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை மாநகராட்சி ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாநகராட்சி உதவி ஆணையர் நூர் அகமது, உதவி ஆணையர் மாணிக்கம் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட பழைய தபால்நிலைய சாலையில் பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை அகற்றும் ரோபோடிக் என்ற நவீன இயந்திரங்களின் மூலம் பாதாள சாக்கடை தூய்மைப் பணிகள் இன்று நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், இன்று நேரில் ஆய்வு செய்தார்.



பின்னர் பணிகள் குறித்து கேட்டறிந்தார். உடன் உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீரங்கராஜ் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...