ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நல வாரியம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இந்திய கம்யூனிஸ்ட் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கலைஞர் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி தலைமையில் தாராபுரம் அண்ணா சிலை முன்பு ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஒன்றிய அரசை கண்டித்தும் மற்றும் தி.மு.க அரசு கலைஞர் கொண்டு வந்த தொழிலாளர் நல வாரியம் அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



விவசாயத் தொழிலாளர்களுக்கு தற்போது உள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்து 1996-2001ஆம் ஆண்டு முடிய இருந்த கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மகாத்மா காந்தி வேலையுறுதியளிப்பு திட்டத்தில் (MGNREGA) வேலை செய்த தொழிலாளர்களுக்கு நிலவையில் உள்ள கோரிக்கையை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...