நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு புளியம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சந்தை மதிப்பில் நிவாரண வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிலம் கொடுத்து வழித்தடம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.


கோவை: நாகர்கோவில்-திண்டுக்கல்-கோவை வரை தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சந்தை மதிப்பில் நிவாரண வழங்க வேண்டும். நிழவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிலம் கொடுத்து வழித்தடம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் சாலை புளியம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த அப்பாவு ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, புளியம்பட்டி கிளை செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...