நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு புளியம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சந்தை மதிப்பில் நிவாரண வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிலம் கொடுத்து வழித்தடம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.


கோவை: நாகர்கோவில்-திண்டுக்கல்-கோவை வரை தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு சந்தை மதிப்பில் நிவாரண வழங்க வேண்டும். நிழவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிலம் கொடுத்து வழித்தடம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் சாலை புளியம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த அப்பாவு ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மதுசூதனன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, புளியம்பட்டி கிளை செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...