கோவை மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் மனு

நல வாரியம் அமைத்துக் கொடுத்த அரசுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.


கோவை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், 98வது வார்டு திமுக கவுன்சிலருமான இரா.உதயகுமார் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி தொகை, விபத்து காப்பீடு அடங்கிய நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். இதனை தற்போது திமுக அரசு நிறைவேற்றி உள்ளது.

எனவே நல வாரியம் அமைத்துக் கொடுத்த அரசுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் மனு அளித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

உடன் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.புரம் கே.ஆர் குமார், அருள்குமார், பாலாஜி, பொள்ளாச்சி பாரூக், சூலூர் செபஸ்டியன், ஆப்ரேட்டர்கள் விவேக், பார்த்தசாரதி, தென்னம்பாளையம் வெங்கடாசலம், அரசூர் பொன்னுசாமி, தொண்டாமுத்தூர் சீனிவாசன், வேடப்பட்டி துரைசிங் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...