கோவை மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் மனு

நல வாரியம் அமைத்துக் கொடுத்த அரசுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.


கோவை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், 98வது வார்டு திமுக கவுன்சிலருமான இரா.உதயகுமார் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி தொகை, விபத்து காப்பீடு அடங்கிய நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். இதனை தற்போது திமுக அரசு நிறைவேற்றி உள்ளது.

எனவே நல வாரியம் அமைத்துக் கொடுத்த அரசுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் மனு அளித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

உடன் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.புரம் கே.ஆர் குமார், அருள்குமார், பாலாஜி, பொள்ளாச்சி பாரூக், சூலூர் செபஸ்டியன், ஆப்ரேட்டர்கள் விவேக், பார்த்தசாரதி, தென்னம்பாளையம் வெங்கடாசலம், அரசூர் பொன்னுசாமி, தொண்டாமுத்தூர் சீனிவாசன், வேடப்பட்டி துரைசிங் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...