கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்க்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவல் துணைக் தலைவர் ஸ்ரீ மோசஸ் தினகரன் வருகை

கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கும், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காவல் துணைக் தலைவர் அவர்களும் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களும் கையெழுத்திட்டனர்.


கோவை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், காவல் துணைக் தலைவர் ஸ்ரீ மோசஸ் தினகரன் அவர்கள், கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்க்கு இன்று வருகை புரிந்தார்.

கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கும், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காவல் துணைக் தலைவர் அவர்களும் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களும் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பி. வெங்கடாசலபதி, அவர்கள் உடனிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர்களின் மூன்று குழந்தைகளுக்கு வருடா வருடம் இலவச கல்வி வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில், லெப்டினன்ட் எஸ்.நித்யா வரவேற்றுப் பேசினார். சைத் பாய், உதவி கமாண்டன்ட் அவர்கள் சிஆர்பிஎஃப் வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கேப்டன் டாக்டர் கே.பி. ஸ்ரீதர் நன்றியுரை வழங்கினார். S.K.தினேஷ், உதவி கமாண்டன்ட் மற்றும் காவல் உதவி துணை-ஆய்வாளர்கள் ஏற்பாட்டுக் குழுவிற்கு உறுதுணையாக இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...