கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்க்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவல் துணைக் தலைவர் ஸ்ரீ மோசஸ் தினகரன் வருகை

கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கும், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காவல் துணைக் தலைவர் அவர்களும் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களும் கையெழுத்திட்டனர்.


கோவை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின், காவல் துணைக் தலைவர் ஸ்ரீ மோசஸ் தினகரன் அவர்கள், கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்க்கு இன்று வருகை புரிந்தார்.

கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கும், ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், காவல் துணைக் தலைவர் அவர்களும் கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழக பதிவாளர் அவர்களும் கையெழுத்திட்டனர். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது கற்பகம் நிகர்நிலை பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பி. வெங்கடாசலபதி, அவர்கள் உடனிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கவும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை காவலர்களின் மூன்று குழந்தைகளுக்கு வருடா வருடம் இலவச கல்வி வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில், லெப்டினன்ட் எஸ்.நித்யா வரவேற்றுப் பேசினார். சைத் பாய், உதவி கமாண்டன்ட் அவர்கள் சிஆர்பிஎஃப் வேலை வாய்ப்புகள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கேப்டன் டாக்டர் கே.பி. ஸ்ரீதர் நன்றியுரை வழங்கினார். S.K.தினேஷ், உதவி கமாண்டன்ட் மற்றும் காவல் உதவி துணை-ஆய்வாளர்கள் ஏற்பாட்டுக் குழுவிற்கு உறுதுணையாக இருந்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...