திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் கொண்டாட்டம் - உறி அடித்து, சிலம்பம் சுற்றி ஆட்சியர் மகிழ்ச்சி

பொங்கல் விழாவில் 101 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் மாட்டுவண்டியில் வந்து விழாவை சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு மாட்டு வண்டியில் வந்து உறி அடித்தும், சிலம்பம் சுற்றியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சாமளாபுரம் குளக்கரையை மையப்படுத்தி சாமளாபுரம் குளக்கரையில் குளக்கரை சுற்றுலா பொங்கல் என திட்டமிடப்பட்டு பொங்கல் விழா நடத்தப்பட்டது.



இந்த பொங்கல் விழாவில் 101 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.



இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டார்.



பொங்கல் வைத்த நிகழ்வு நிறைவடைந்த பின்பு சாமளாபுரம் குளக்கரையில் இருந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் மாரியம்மன் கோவில் திடல் வரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் மாட்டுவண்டியில் வந்தனர்.



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உறி அடித்தும், சிலம்பம் சுற்றியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து சிலம்பாட்டம், கரகாட்டம், வள்ளி கும்மி ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...