திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் கொண்டாட்டம் - உறி அடித்து, சிலம்பம் சுற்றி ஆட்சியர் மகிழ்ச்சி

பொங்கல் விழாவில் 101 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் மாட்டுவண்டியில் வந்து விழாவை சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு மாட்டு வண்டியில் வந்து உறி அடித்தும், சிலம்பம் சுற்றியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சாமளாபுரம் குளக்கரையை மையப்படுத்தி சாமளாபுரம் குளக்கரையில் குளக்கரை சுற்றுலா பொங்கல் என திட்டமிடப்பட்டு பொங்கல் விழா நடத்தப்பட்டது.



இந்த பொங்கல் விழாவில் 101 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.



இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டார்.



பொங்கல் வைத்த நிகழ்வு நிறைவடைந்த பின்பு சாமளாபுரம் குளக்கரையில் இருந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் மாரியம்மன் கோவில் திடல் வரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் மாட்டுவண்டியில் வந்தனர்.



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உறி அடித்தும், சிலம்பம் சுற்றியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து சிலம்பாட்டம், கரகாட்டம், வள்ளி கும்மி ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...