குருகோபிந் சிங் பிறந்த நாள் விழா மத நல்லிணக்க விழாவாக கோவையில் கொண்டாட்டம்

மத நல்லிணக்க விழாவில், குருகோபிந் சிங் அவர்களின் நினைவாக கலை கலச்சார நிகழ்வுகள் நடைபெற்றன. குழந்தைகளின் நிகழ்ச்சியாக பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.


கோவை: சீக்கியர்களின் புனித அக்மாத குருவான பத்தாவது மதகுரு, குருகோபிந் சிங் அவர்களின் பிறந்தநாள் விழா, சமய சமூக நல்லிணக்க விழாவாக கோவையில் உள்ள குருவாரா சிங் சபாவில் சிறப்பாக நடைபெற்றது.



குருத்வாராவின் தலைவர், செயலாளர் ஆகியோரின் அழைப்பின் பேரில், சர்வ மத தலைவர்கள், பல் சமய அறிஞர்கள், அரசு உயர் அதிகாரிகள், மில்ட்ரி அதிகாரிகள், கோவை மாவட்ட மேஜிஸ்ட்ரேட் அருணாச்சலம், அப்துல் அக்கீம், முகமது அக்கீம், பேராசிரியர் காதர் மொய்தீன், முஜ்ஜின் ரகுமான் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.



இந்த விழா கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இறுதி குருவான குருகோபிந் சிங் அவர்களின் நினைவாக கலை கலச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.



குழந்தைகளின் நிகழ்ச்சியாக பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். கோவை மாநகரில் இந்தவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவினை, குருத்வாராவின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



இந்தநிகழ்வில், தொல் சமய நல்லுறவு இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...