திமுக அரசு விலை வாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது - பொள்ளாச்சியில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயக்கருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயக்கருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டியின் போது, திமுக ஆட்சியில் எங்கும் ஊழல். எதிலும் ஊழல். கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் மு.க.ஸ்டாலின் ஆட்சி. மக்களுக்கான நல்ல காரியங்களை அரசு செய்வதில்லை. இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபமடைந்துள்ளனர்.

எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி. ஓடாத கார் ரேஸுக்கு ரூ.44 கோடி நிதி ஒதுக்கும் அரசு, மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால் வெள்ள நிவாரண நிதியை சேர்த்து கொடுத்திருக்கலாம். விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சவால் விட்டு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...