திமுக அரசு விலை வாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது - பொள்ளாச்சியில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயக்கருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயக்கருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டியின் போது, திமுக ஆட்சியில் எங்கும் ஊழல். எதிலும் ஊழல். கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் மு.க.ஸ்டாலின் ஆட்சி. மக்களுக்கான நல்ல காரியங்களை அரசு செய்வதில்லை. இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபமடைந்துள்ளனர்.

எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி. ஓடாத கார் ரேஸுக்கு ரூ.44 கோடி நிதி ஒதுக்கும் அரசு, மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால் வெள்ள நிவாரண நிதியை சேர்த்து கொடுத்திருக்கலாம். விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சவால் விட்டு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...