காங்கேயம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் - பாரம்பரிய உடையில் வந்த காவலர்கள்

தைப்‌ பொங்கலை முன்னிட்டு காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையில் வந்து பொங்கல் வைத்து போலிசார் மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-தாராபுரம் சாலையில் காங்கேயம் காவல் நிலையம் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. தைப்‌ பொங்கலை முன்னிட்டு காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



மேலும் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு ஆண் காவலர்கள் சட்டை வேஷ்டியிலும், பெண் காவலர்கள் சேலை அணிந்தும் வந்திருந்தனர். இதில் இரண்டு காவல் நிலைய வளாகங்களிலும் வண்ண கோலமிட்டு பாரம்பரிய முறைப்படி அடுப்புக் கூட்டி, கரும்புகள் வைத்து மண் பானையில் பொங்கல் வைத்து அனைத்து போலிசாரும் இணைந்து பொங்கல் விழாவை உற்சாகமாகவும், மிகச் சிறப்பாகவும் கொண்டாடினர்.

மேலும் உதவி காவல் ஆய்வாளர்கள் சந்திரன், கார்த்திக், கோமதி, மாலா, பாஸ்கர், சத்தியமூர்த்தி மற்றும் காங்கேயம் காவல் நிலைய போலிசார்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...