கோவை கங்கா இன்ஸ்டிடியூட்டில் செவிலியர் பயிற்சி துவக்க விழா

கோவை துடியலூரில் உள்ள கங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.


கோவை: கோவை துடியலூரில் உள்ள வட்டமலைபாளையம் பகுதியில் கங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் செவிலியர் பயிற்சியின் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமாகி, குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.



விழாவில் கங்கா மருத்துவமனையின் தலைவர் கனகவள்ளி சண்முகநாதன், கல்லூரி முதல்வர் எஸ்தர் ஜான், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஏ. கலியமூர்த்தி, திருச்சூர் அன்னை செவிலியர் கல்லூரி முதல்வர் உஷா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செவிலியர்களின் பங்கு குறித்து டாக்டர். ஏ. கலியமூர்த்தி உரையாற்றினார்.



மாணவ, மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்தனர். சி.என்.ஓ இக்னேசியஸ் மேரி புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசித்தார், 120 செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



அலைடு ஹெல்த் சயின்ஸ் ஆசிரியர் அகிலாதேவி மாணவ, மாணவிகளுக்கு சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார். கல்லூரி துணை முதல்வர் ஜெபாகுமாரி நன்றி கூறிய பிறகு, அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் ஏர் ஆம்புலன்ஸ், செல்பி பயிண்ட்ஸ் அமைக்கப்பட்டு இருந்தன, மேலும் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...