கோவை கங்கா இன்ஸ்டிடியூட்டில் செவிலியர் பயிற்சி துவக்க விழா

கோவை துடியலூரில் உள்ள கங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.


கோவை: கோவை துடியலூரில் உள்ள வட்டமலைபாளையம் பகுதியில் கங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் செவிலியர் பயிற்சியின் துவக்க விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமாகி, குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.



விழாவில் கங்கா மருத்துவமனையின் தலைவர் கனகவள்ளி சண்முகநாதன், கல்லூரி முதல்வர் எஸ்தர் ஜான், முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஏ. கலியமூர்த்தி, திருச்சூர் அன்னை செவிலியர் கல்லூரி முதல்வர் உஷா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செவிலியர்களின் பங்கு குறித்து டாக்டர். ஏ. கலியமூர்த்தி உரையாற்றினார்.



மாணவ, மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்தனர். சி.என்.ஓ இக்னேசியஸ் மேரி புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை வாசித்தார், 120 செவிலியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



அலைடு ஹெல்த் சயின்ஸ் ஆசிரியர் அகிலாதேவி மாணவ, மாணவிகளுக்கு சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார். கல்லூரி துணை முதல்வர் ஜெபாகுமாரி நன்றி கூறிய பிறகு, அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் ஏர் ஆம்புலன்ஸ், செல்பி பயிண்ட்ஸ் அமைக்கப்பட்டு இருந்தன, மேலும் பொங்கல் விழாவும் கொண்டாடப்பட்டது.

Newsletter

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...