கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் பொங்கல் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.


கோவை: கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் 12.01.2024, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.



காளை மாடுகள், குதிரைகள், ஆட்டுக்கிடாய்களின் வரிசையுடன் நடைபெற்ற விழாவினை துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி அவர்கள் தொடங்கிவைத்தார்.



விழாவையொட்டி மாணவர்களின் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டாகிய சிலம்பம் மற்றும் ஒற்றைக்கம்பு வீச்சுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.



அத்துடன் பொங்கல் வைத்தல், கோலமிடுதல், நாட்டுப்புற நடனமாடல் போட்டிகளும், உரியடித்தல், கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் சிறப்புற நடைபெற்றன.



நாட்டுப்புறக் கலைஞர்களின் கரகம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம் முதலான நிகழ்வுகளும் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...