கோட்டைமேடு கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா - பக்தர்கள் சிறப்பு வழிபாடு

மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது, பக்தர்கள் நெய் விளக்கேற்றி அனுமன் உள்ளிட்ட பஜனை பாடல்களை பாடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வசப்பட்ட கோட்டைவாசல் ஆஞ்சநேயர் கோட்டைமேடு கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. வேறு எங்கும் இல்லாதபடி இங்கு மார்கழி மாதத்தில் வரும் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

மூலவர் ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி அனுமன் உள்ளிட்ட பஜனை பாடல்களை பாடினர்.



மா மற்றும் இலை பூ மாலை சூட்டப்பட்டு வெண்ணை காப்பு சாற்றப்பட்டது.

பூஜைகளை கோவில் பட்டாசிரியர்கள் செய்தனர்.



பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோன்று காடு அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான பத்மநாபன், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் செந்தில்குமார், திமுக அவை தலைவர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...