உடுமலை அமராவதி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

கல்லாபுரம், ருத்ராபாளையம், கொழுமம், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர், காந்தளூர், தூவானம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் இடைவிடாமல் பெய்த மழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து 4400 கன அடி வந்த நிலையில் அணை நிரம்பியது.



இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அணையின் பிரதான மதகுகள் வழியாக வினாடிக்கு 5,400 கன அடி உபரி நீர் தற்போது வெளியேற்றப்பட்டு வருகின்றது.



தற்சமயம் மொத்த 90 அடியில் 89.24 அடியாக உள்ளது. இதற்கிடையில் தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அமராவதி அணையில் கரையோர கிராமங்களான கல்லாபுரம், ருத்ரா பாளையம், கொழுமம், மடத்துக்குளம், கணியூர், காரத்தொழுவு உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...