உடுமலை அருகே திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் 34-வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு

மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், யோகா, தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நிறைவு விழாவில் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து, பின்னர் குரு மகானிடம் அருளாசி பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் தென்கயிலை உலக சமாதான ஆலயம் உள்ளது. உலக பொது நிர்வாகம், பொது நாணயம், பொதுமொழி, ஓர் உலக சமதர்ம சமத்துவ நல்லாட்சி உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக நிறைவு பெற 34-வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி கடந்த மாதம் 17- ம் தேதி தொடங்கியது.

குரு மகான் பிரமிடு வடிவிலான அறையில் அமர்ந்து 21 நாட்கள் தவ வேள்வி மேற்கொண்டார். வேள்வியின் நிறைவு விழா நடைபெற்றது. குருமகான் பிரவணாலயத்தில் இருந்து வெளியில் வந்தார். அதைத் தொடர்ந்து ஒரு நிமிட அமைதி, அஷ்ட தீபம் ஏற்றுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. உலக சமாதான அறக்கட்டளை பொதுச்செயலாளர் கே.எஸ்.சுந்தரராமன் வரவேற்புரை ஆற்றினார்.

குருமகா பீடாதிபதி பாலபிரஜாபதி அடிகளார் தலைமை உரையாற்றினார். பொள்ளாச்சி தொகுதி எம்.பி கு.சண்முகசுந்தரம் முன்னிலை உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பிரபஞ்ச நல வாழ்த்து, உலக அமைதிக்கான ஒரு நிமிட அமைதியும் நடைபெற்றது.

பின்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதி எ.எ.நக்கீரன் சிறப்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து நூல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து குருமகான் அருளுரை வழங்கினார்.



அத்துடன் மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், யோகா, தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் குரு மகானிடம் அருளாசி பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உலக சமாதான அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...