உடுமலையில் வழக்கம் போல் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கம்

பணிக்கு வராத தொழிற்சங்கத்தினருக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று அண்ணா தொழிற்சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உடுமலை போக்குவரத்து பணிமனையில் இயக்கப்பட்டு வரும் 94 கிராமம் மற்றும் புறநகர் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன.



மேலும் பணிக்கு வராத தொழிற்சங்கத்தினருக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதனால் உடுமலை பேருந்து நிலையம் பகுதியில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன.



இருப்பினும் உடுமலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன் தலைமையில் உடுமலை போக்குவரத்து பணிமனை முன்பு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...