நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: பெரியநாயக்கன்பாளையம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 9.01.2024 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.