தனிநபரின் அராஜங்கத்தை கண்டித்து பல்லடம் அருகே அருள்புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்

சிவகணேஷ் என்பவர் தனது இரண்டு ஆட்டோக்களை தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாக ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த 24 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் பொது நல சங்கம் என்ற பெயரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இங்கு சுமார் 20 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ள நிலையில், அதே பகுதியில் சிவகணேஷ் என்பவர் தனது இரண்டு ஆட்டோக்களை தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாகவும், இதனால் 20 ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சங்கத்தின் சார்பில் பல்லடம் காவல் நிலையத்திலும், ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் அளித்திருந்தனர்.



ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் சிவ கணேஷ் என்பவர் தொடர்ச்சியாக வாகனத்தை நிறுத்துவதை கண்டித்து, இன்று தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், சிவ கணேஷ் என்ற தனிநபரின் அராஜகப் போக்கால் 20 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அவரது வாகனத்தை அப்புறப்படுத்தினால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிட போவதாக தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...