தனிநபரின் அராஜங்கத்தை கண்டித்து பல்லடம் அருகே அருள்புரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டம்

சிவகணேஷ் என்பவர் தனது இரண்டு ஆட்டோக்களை தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாக ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருள்புரத்தில் தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த 24 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் பொது நல சங்கம் என்ற பெயரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

இங்கு சுமார் 20 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ள நிலையில், அதே பகுதியில் சிவகணேஷ் என்பவர் தனது இரண்டு ஆட்டோக்களை தண்ணீர் பந்தல் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்வதாகவும், இதனால் 20 ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சங்கத்தின் சார்பில் பல்லடம் காவல் நிலையத்திலும், ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் அளித்திருந்தனர்.



ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் சிவ கணேஷ் என்பவர் தொடர்ச்சியாக வாகனத்தை நிறுத்துவதை கண்டித்து, இன்று தண்ணீர் பந்தல் பேருந்து நிறுத்தத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், சிவ கணேஷ் என்ற தனிநபரின் அராஜகப் போக்கால் 20 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அவரது வாகனத்தை அப்புறப்படுத்தினால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிட போவதாக தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...