பூமியை சுத்தமாக வைக்கக் கோரி கோவையில் மாணவர்கள் விழிப்புணர்வு

கல்லூரி மாணவர்கள் பூமியை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். மேலும் ரயில் நிலையத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: நிலத்தில் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பொருட்களை குப்பைகளாக போடுவதால் நிலம் மாசடைந்து ஆபத்தான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பலரும் எச்சரித்து வருகின்றனர். இதனால் பூமியை பாதுகாக்கவும், பசுமையாக வைத்துக் கொள்ளவும் பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள் முன்வந்து பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை மத்திய ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தனியார் கல்லூரி சார்பில் பூமியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பசுமையாக வைத்துக் கொள்ளவும் வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட கல்லூரி மாணவர்கள் பூமியை தூய்மையாக வைத்துக் கொள்வதை வலியுறுத்தி விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.



மேலும் ரயில் நிலையத்தில் வரிசையாக நின்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதில் சில மாணவர்கள் முகத்தில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு வாசகங்களை எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...