துலுக்கனூர் பகுதியில் சாலை போட்டதில் ஒப்பந்ததாரர் முறைகேடு - மக்கள் சாலை மறியல்

மண் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி தர வேண்டும் என துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட துலுக்கனூர் 13-வது வார்டில் சிமெண்ட் சாலை அமைத்ததில் விநாயகர் கோவிலுக்கு மேற்குபுறம் உள்ள நடு வீதிக்கு 40-மீட்டர் அளவு போடாமல் விட்டு, துலுக்கனூரில் உள்ள கோவில் பகுதிக்கு வரவேண்டிய சாலையை கிழபுறம் உள்ள தனி நபர் பட்டா இடத்திற்கு 4.0 மீட்டர் சாலை போட்டு தனியார் நில உரிமையாளரிடம் பணம் பெற்று ஒப்பந்ததாரர்கள் முறைகேடாக பஞ்சாயத்து பணத்தை செலவு செய்து சாலை அமைத்துள்ளனர்.



இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் 100-குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது பண்டில் பணமில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.



விநாயகர் கோவிலுக்கு மேற்குபுறம் உள்ள நடு வீதியிலிருந்து உள்ள 40 மீட்டர் கோவிலுக்கு பொதுமக்கள் சாமி கும்பிட்டுச் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது.



எனவே துலுக்கனூர் நடு வீதியிலிருந்து கோவிலுக்கு கிழக்கே செல்லும் மெயின் பாதையில் 40 மீட்டர் தூரம் சிமெண்ட் சாலை அமைத்து கோவிலுக்கு பொதுமக்கள் சென்று வழிபாடு செய்யவும், பொதுமக்கள் அவசர தேவைக்கும் தினசரி தேவைக்கும் பயன்பட்டு வரும் மண் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை கேட்டு கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நின்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் துலுக்கனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...