வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவர் ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, செயல் திறனைப் பகிர்ந்து கொள்ளுதல், முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது போன்றவற்றில் இணைந்து செயல்படுவது என புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ஆந்திராவில் அமைந்துள்ள முனைவர் ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.01.2024 அன்று கோவையில் கையெழுத்தானது.

ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகமானது தோட்டக்கலையில் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கம் போன்றவற்றை திறம்பட நடத்திச் செல்லும் ஒரு அரசு பல்கலைக்கழகமாகும். தோட்டக்கலை சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், பண்பகப்பண்ணையின் விதைகள், தொழில்நுட்பங்கள், தகவல் மற்றும் ஆராய்ச்சிமுறை, கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, செயல் திறனைப் பகிர்ந்து கொள்ளுதல், முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவது போன்றவற்றில் இணைந்து செயல்படுவது மற்றும் இதர அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி இந்த ஒப்பந்தம் உருவாக பெரிதும் துணைநின்றார். ஒய். எஸ். ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் டி.ஜானகிராம் அவர்கள் இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகளைப் பற்றி கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இரா. தமிழ்வேந்தன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் பி.சீனிவாசலு ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் பெ.ஐரின் வேதமணி அவர்கள் இந்த ஒப்பந்தம் உருவாக அடித்தளமிட்டு செயல்படுத்தினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இயக்குனரத்தின் முதல்வர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...