பெரியநாயக்கன்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் - 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டு வசதி நகர்பு புற வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி சார்பில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



முகாமிற்கு பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் விஸ்வ பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், கோவை மாவட்ட பேரூராட்சிகள் துறை உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், செயல் அலுவலர் நந்தகுமார், துணைத் தலைவர் உமாதேவி பழனிச்சாமி, துப்புரவு ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வீட்டு வசதி நகர்பு புற வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,காவல்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற பொது மக்களிடம் மனுக்களை பெற்றனர்.



மேலும் மாற்றுத்திறனாளி ஒருவரின் மனுவை அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பேரூராட்சித் தலைவர் விஸ்வபிரகாஷ் பெற்றுக்கொண்டார். இதில் கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், அம்பிகா பால்ராஜ், கமலவேணி, சிவராஜ், பிரகாஷ், ரங்கசாமி, சௌந்தர்யா, பிரதீப் கந்தசாமி, ஜனனிஉமாபதி, சந்தோஷ் குமார், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...