கோவையில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் அறை திறப்பு விழா

நடந்ததை நேரடியாக பதிவு செய்து அதில் யார் மீது தவறு உள்ளது, என்ன நடந்தது என்பதை கண்டு வழக்கு பதிவு செய்ய ஏதுவாக சிசிடிவி காட்சிகள் பேருதவியாக உள்ளது என மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகர் D 6, கரும்பு கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரும்பு கடை சாரமேடு பகுதியில் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கண்காணிப்பு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



மேலும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அவர் கூறுகையில். காவல்துறையினருக்கு ஒரு சிறந்த நல்வழிகாட்டியாக இருப்பது சிசிடிவி காட்சிகள். நடந்ததை நான்கு பேரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுவதை விட, நடந்ததை நேரடியாக பதிவு செய்து அதில் யார் மீது தவறு உள்ளது, என்ன நடந்தது என்பதை கண்டு வழக்கு பதிவு செய்ய ஏதுவாக இந்த சிசிடிவி காட்சிகள் பேருதவியாக உள்ளது என்றார்.

தொடர்ந்து இன்று 12 கேமரா பொருத்த பட்டு அதனை கண்காணிப்பு செய்யும் அறையை திறந்து வைப்பது, குற்றங்களை முழுமையாக தடுப்பதாக நான் கருதுகிறேன் என்றார். மேலும், செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்டவைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இது மாதிரியான சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு முக்கிய நண்பனாக செயல்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்வில் கரும்புகடை பகுதியின் கவுன்சிலர் அஹ்மத் கபீர், கரும்புகடை பகுதி காவல் ஆய்வாளர் தங்கம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும், தெற்கு உதவி ஆணையர் வீரபாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...