கோவையில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மைய கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மைய கட்டடத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68-க்குட்பட்ட இச்சிப்பட்டி காலனியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மைய கட்டடத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள், கமலாவதிபோஸ், கண்ணகிஜோதிபாசு, உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் ஆகியோர் இருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.40-க்குட்பட்ட வீரகேரளம், ஆனந்தா நகரில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுவிநியோகக் கடையை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்து, பொமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்கள்.



உடன் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் பத்மாவதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.39-க்குட்பட்ட மகாராணி அவென்யூ பகுதியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



உடன் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் லட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...