கோவையில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மைய கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மைய கட்டடத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.68-க்குட்பட்ட இச்சிப்பட்டி காலனியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் மைய கட்டடத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள், மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள், கமலாவதிபோஸ், கண்ணகிஜோதிபாசு, உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் ஆகியோர் இருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.40-க்குட்பட்ட வீரகேரளம், ஆனந்தா நகரில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுவிநியோகக் கடையை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்து, பொமக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்கள்.



உடன் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் பத்மாவதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.39-க்குட்பட்ட மகாராணி அவென்யூ பகுதியில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகக் கட்டடத்தை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் அவர்கள், நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.



உடன் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் அவர்கள், மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் லட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...