கோவையில் நள்ளிரவிரல் அசைவ கடையில் குவிந்த மக்கள் - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

காவல்துறை அனுமதித்த நேரத்தை கடந்து, 3 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைகளை மூட போலிசார் அறிவித்து வந்தனர். அப்போது அங்கிருந்த அசைவ பிரியர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இதனால் போலிசார் லேசான தடியடி நடத்தினர்.


கோவை: உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டட்டம் நள்ளிரவு முதலே ஆரம்பித்தது. இந்த நிலையிலே, கோவையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கொண்டாட்டத்தில் ஆடி, பாடி குதூகலத்துடன் புத்தாண்டை ரசித்த பொதுமக்கள், அதன் பின்னர் ருசிக்க திட்டமிட்டு உணவங்களை முகாமிட்டனர். இரவு 1 மணிக்கு மேல் உணவு உட்கொள்ள, அசைவ உணவகங்களை பெரும்பாலானோர் தேடி சென்றனர்.



அதன் அடிப்படையில் கோவை கோட்டைமேடு பகுதில் பிரியானி, கிரில் சிக்கன், சிக்கன் ரைஸ் உள்ளிட்ட அசைவ உணவுகளை உட்கொள்ள அசைவ பிரியர்கள் அலைமோதினர்.



இதனால் இரவில் அந்த பகுதி சாலைகள் நெரிசலாக காணப்பட்டது.



காவல்துறை அனுமதித்த நேரத்தை கடந்து, 3 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைகளை மூட போலிசார் அறிவித்து வந்தனர். அப்போது அங்கிருந்த அசைவ பிரியர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையிலெ, போலிசார் லேசான தடியடி நடத்தினர்.



இதனால் அசைவ பிரியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். புத்தாண்டு கொண்டாட்டிவிட்டு அசைவம் ருசிக்க வந்தவர்கள் அடி வாங்கி வீடு திரும்பினர். லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...