கோவையில் நள்ளிரவிரல் அசைவ கடையில் குவிந்த மக்கள் - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு

காவல்துறை அனுமதித்த நேரத்தை கடந்து, 3 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைகளை மூட போலிசார் அறிவித்து வந்தனர். அப்போது அங்கிருந்த அசைவ பிரியர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இதனால் போலிசார் லேசான தடியடி நடத்தினர்.


கோவை: உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டட்டம் நள்ளிரவு முதலே ஆரம்பித்தது. இந்த நிலையிலே, கோவையில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கொண்டாட்டத்தில் ஆடி, பாடி குதூகலத்துடன் புத்தாண்டை ரசித்த பொதுமக்கள், அதன் பின்னர் ருசிக்க திட்டமிட்டு உணவங்களை முகாமிட்டனர். இரவு 1 மணிக்கு மேல் உணவு உட்கொள்ள, அசைவ உணவகங்களை பெரும்பாலானோர் தேடி சென்றனர்.



அதன் அடிப்படையில் கோவை கோட்டைமேடு பகுதில் பிரியானி, கிரில் சிக்கன், சிக்கன் ரைஸ் உள்ளிட்ட அசைவ உணவுகளை உட்கொள்ள அசைவ பிரியர்கள் அலைமோதினர்.



இதனால் இரவில் அந்த பகுதி சாலைகள் நெரிசலாக காணப்பட்டது.



காவல்துறை அனுமதித்த நேரத்தை கடந்து, 3 மணிக்கு மேல் கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைகளை மூட போலிசார் அறிவித்து வந்தனர். அப்போது அங்கிருந்த அசைவ பிரியர்கள் யாரும் கலைந்து செல்லவில்லை. இந்த நிலையிலெ, போலிசார் லேசான தடியடி நடத்தினர்.



இதனால் அசைவ பிரியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். புத்தாண்டு கொண்டாட்டிவிட்டு அசைவம் ருசிக்க வந்தவர்கள் அடி வாங்கி வீடு திரும்பினர். லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...