தாராபுரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் உட்பட இரண்டு பேர் கைது

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சிறுமியை ராஜேந்திரன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அறிந்த தாய், சிறுமியிடம் விசாரித்தபோது, ராஜேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்ததையும் அதன் மூலம் கர்ப்பம் அடைந்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய 65 வயது முதியவரையும், கருகலைப்புக்கு உதவிய செவிலியரையும் தாராபுரம் மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் மூலனூரை அடுத்த எரகாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (65) என்பவரது தோட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 5-மாதங்களுக்கும் மேலாக அச்சிறுமியை ராஜேந்திரன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அறிந்த தாய் சிறுமியிடம் விசாரித்தபோது, ராஜேந்திரன் பாலியல் பலாத்காரம் செய்ததையும் அதன் மூலம் கர்ப்பம் அடைந்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜேந்திரனிடம் அச்சிறுமியின் தாய் கேட்டபோது, கருவைக் கலைக்காவிட்டால் சிறுமியையும், அவரையும் கொலை செய்வதாக மிரட்டி உள்ளார்.

இதைத் தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் உஷாராணியை வீட்டுக்கு வரவழைத்து அவர் மூலம் சிறுமிக்கு கருகலைப்பு மாத்திரை வழங்கப்பட்டுள்ளது. இதனால், டிசம்பர் 14-ஆம் தேதி சிறுமிக்கு கருகலைப்பும் ஏற்பட்டுள்ளது.



இந்த தகவல் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மூலம் குழந்தைகள் நல குழும உறுப்பினர் தாரணிக்கு கிடைத்துள்ளது. அவர் அளித்த புகாரின்பேரில், தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸார் ராஜேந்திரனையும், கருகலைப்பு உதவிய உஷாராணியையும் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சிறுமி கர்ப்பமானதை அடுத்து கருவைக் கலைக்க ராஜேந்திரன் திட்டமிட்டுள்ளார். இதற்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் உஷாரணியை அணுகி உள்ளார். அவரும் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு ராஜேந்திரன் வீட்டுக்கே வந்து சிறுமியை பரிசோதித்துவிட்டு கரு கலைப்புக்கான மாத்திரைகளைக் கொடுத்துள்ளார்.

அதை சாப்பிட்ட சிறுமிக்கு கருகலைப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவர் மீதும் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிறுமி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது ஜாதியைச் சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்ததற்காக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர். மேலும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் தாராபுரம் மகளிர் போலீசார் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...