குண்டடத்தில் உழவர் உற்பத்தியாளர் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஒன்றியத்தில் பொங்கலூர் உழவர் 36 நிறுவனத்தின் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சிவகாமி புவனேஸ்வரமூர்த்தி தலைமையில் குண்டடம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசன் மூர்த்தி, குத்து விளக்கு ஏற்றி உழவர் உற்பத்தியாளர் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியை குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு பல எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.



இலவச மின்சாரம், மானிய விலையில் விவசாய உபகரணங்கள் வழங்குதல், இப்படி பல எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...