குண்டடத்தில் உழவர் உற்பத்தியாளர் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஒன்றியத்தில் பொங்கலூர் உழவர் 36 நிறுவனத்தின் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம் நிறுவனத் தலைவர் சிவகாமி புவனேஸ்வரமூர்த்தி தலைமையில் குண்டடம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசன் மூர்த்தி, குத்து விளக்கு ஏற்றி உழவர் உற்பத்தியாளர் முதலாமாண்டு பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியை குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளுக்கு பல எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.



இலவச மின்சாரம், மானிய விலையில் விவசாய உபகரணங்கள் வழங்குதல், இப்படி பல எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவித்து செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...