ஏஐசி ரைஸ் மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது

ஏஐசி ரைஸ்-ன் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் பங்கேற்ற கருத்தாய்வில் "தமிழ்நாட்டில் காலநிலை தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பட்டியலிடுதல்" என்ற தலைப்பில் இந்தத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய அவரது கருத்துகள் பலரின் கவனத்தை ஈர்த்தது.


கோவை: தொழில் முனைவோர்கள் மற்றும் புத்தாக்கக் கருத்துகளை வளர்ப்பதிற்கான சான்றாக, ஸ்டார்ட் அப் தமிழ்நாடு வழங்கிய காலநிலைசார் தொழில் நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 28.12. 2023) நடைபெற்ற கூட்டம் முக்கிய பங்கு வகித்தது.

ஏஐசி ரைஸ்-ன் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் பங்கேற்ற கருத்தாய்வில் "தமிழ்நாட்டில் காலநிலை தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பட்டியலிடுதல்" என்ற தலைப்பில் இந்தத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய அவரது கருத்துகள் பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் ஏஐசி ரைஸ் இந்த துறையின் கீழ் செயல்படும் தொழில்முனைவோர்கள்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறினார்.

சின்க்ரோன் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஸ்ரீராம் சங்கரன், பயோஃப்பிள்-இன் தலைமை நிர்வாக அதிகாரி கிஷன் கருணாகரன் மற்றும் சர்க்கிள்எக்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் விஷ்ணுவரதன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் ஓர் பகுதியாக ஏஐசி ரைஸ் மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு-ன் மிஷன் இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதனுடன் ஏஐசி ரைஸ்-ன் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், ஆகியோர் பங்குப் பெற்றனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...