சுப்பிரமணியம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



தமிழ்நாடு முதல்வர் அவர்களால் கோவையில் துவக்கி வைக்கப்பட்டு தமிழகமெங்கும் சிறப்பாக செயல்பாட்டுவரும் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 15வது வார்டுக்குட்பட்ட சுப்பிரமணியம்பாளைத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதற்கு 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கி மனுக்களை பொதுமக்களிடம் பெற்றுக்கொண்டார். இந்த முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.



இந்த முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் சிறப்பாளர்களாக வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், உதவி ஆணையாளர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் இளங்கோ, மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாலாஜி, உதவி பொறியாளர் உத்தமன், காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், துறை அதிகாரிகள் ஜெயகுமார், நித்யா, அமுதவள்ளி, அஸ்வீன்ராஜ், கிருபா, பிரேமா, தீனதயாளன், ராம்சாமி, ஸ்ரீதேவி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சேக் அப்துல் காதர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சின்னுராமகிருஷ்ணன், செந்தில்குமார், திமுக வட்ட செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...